athu pattatha kondanallo..pinne ippolulla main cases onnu mukem venam:thumbdown::thumbdown1::cursing::cursing:
Printable View
மம்மூட்டி, மோகன்லால் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை
பதிவு செய்த நாள் : 7/23/2011 0:14:30
http://dinakaran.com/images/icon-comment.gif கருத்துகள் கருத்துகளை தெரிவிக்க
http://dinakaran.com/data1/Newsimage...9376642705.jpg திருவனந்தபுரம் : பிரபல நடிகர்கள் மம்மூட்டி, மோகன்லாலின் சென்னை, திருவனந்தபுரம், கொச்சி, பெங்களூரில் உள்ள வீடுகளில் வருமான வரித் துறையினர் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். இதில் கணக்கில் காட்டப்படாத பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களுக்கான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. பிரபல மலையாள சூப்பர் ஸ்டார் நடிகர்களான மம்மூட்டி, மோகன்லாலுக்கு சென்னை, கொச்சி, திருவனந்தபுரம், பெங்களூர் ஆகிய இடங்களில் வீடுகள், அலுவலகங்கள் உள்ளன. இவர்களுக்கு சொந்தமான வீடுகளில் நேற்று காலை 6 மணியளவில் ஒரே நேரத்தில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.
திருவனந்தபுரத்தில் மோகன்லாலுக்கு சொந்தமான டப்பிங் ஸ்டுடியோவிலும், கொச்சியில் தேவராவில் உள்ள வீட்டிலும், கடவந்திராவில் உள்ள மம்மூட்டி வீட்டிலும் சோதனை நடந்தது. இந்த சோதனையில் இருவரின் வீடுகளில் இருந்தும் கணக்கில் காட்டப்படாத பல கோடி மதிப்புள்ள சொத்துக்களின் ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. மேலும், மோகன்லானின் நண்பரான ஆண்டனி பெரும்பாவூரின் கொச்சி வீட்டிலும் சோதனை நடந்தது. இவர்தான் சமீப காலமாக மோகன்லாலின் படங்களை தயாரித்து வருகிறார். சோதனை நடந்தபோது சென்னையில் உள்ள வீட்டில் மம்மூட்டி இருந்தார். நேற்று முன்தினம்தான் அவருடைய மகனின் நிச்சயதார்த்தம் நடந்தது.
மம்மூட்டி, மோகன்லால் வீடுகளில் வருவான வரித்துறை திடீர் சோதனை நடத்தியது தமிழ், மலையாள திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. பா.ஜ தலைவர் நிதின் கட்கரியின் மகன் நிகில் கட்கரி. இவர் நாக்பூரை சேர்ந்த அங்குர் சிட்ஸ் நிறுவனத்தில் பங்குதாரராக இருக்கிறார். இந்நிறுவனம் பல இடங்களில் ஏராளமாக முதலீடு செய்துள்ளதை வருமான வரித் துறையினர் கண்டுபிடித்துள்ளனர். அதன் அடிப்படையில் அங்குர் சிட்ஸ் நிறுவனத்திலும் வருமான வரித் துறையினர் நேற்று சோதனை நடத்தினர்.
யானை தந்தம் சிக்கியது
கொச்சியில் உள்ள மோகன்லால் வீட்டில் நடத்திய சோதனையில் 2 யானை தந்தம் கைப்பற்றப்பட்டன. இது குறித்து தகவல் அறிந்ததும் வனத்துறை அதிகாரிகள் மோகன்லால் வீட்டுக்கு சென்று விசாரித்தனர். சொத்துகள் சம்பந்தமாக மம்மூட்டியிடம் சென்னை வீட்டில் விசாரணை நடத்தப்பட்டது. மலையாள படப்பிடிப்புக்காக மோகன்லால் தனுஷ்கோடியில் இருந்தார். அதிகாரிகள் அங்கு சென்று விசாரித்தனர். இதற்கிடையே, மோகன்லாலுக்கு ராணுவத்தில் அளிக்கப்பட்ட கவுரவ பதவியை பறிக்க வேண்டும் என்று பிரபல மலையாள எழுத்தாளர் சுகுமார் அழிக்கோடு வலியுறுத்தி உள்ளார்.
திறக்கமுடியாத லேசர் அறைகள்
மோகன்லால் வீட்டில் லேசர் தொழில் நுட்பத்தில் திறக்கக் கூடிய 2 அறைகள் உள்ளன. இவற்றை வருமான வரித்துறை அதிகாரிகளால் திறக்க முடியவில்லை. இவை மோகன்லால் வந்த பிறகு திறந்து சோதனை நடத்தப்பட உள்ளது.